உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பாத யாத்திரை சென்றவர்கள் மீது வாகனம் மோதல்: 5 பேர் பலி

பாத யாத்திரை சென்றவர்கள் மீது வாகனம் மோதல்: 5 பேர் பலி

திருச்சி: தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜூலை 17) காலை மினி லாரி மோதி 5 பேர் உயிரிழந்தனர். வளம்பகுடி என்ற இடத்தில் திருச்சி சமயபுரத்திற்கு நெடுஞ்சாலை ஓரமாக பாத யாத்திரையாக சென்றவர்கள் மீது மினி லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் ஆறுதல்

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி