தொழிலதிபர் வீட்டில் 40 சவரன் கொள்ளை
வேலுார்:வேலுார், சாப்னாமேடு பகுதியை சேர்ந்தவர் கதீர் அகமது, 48; வேலுார் பைபாஸ் சாலையில், லாரி உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை, கதீர் அகமது வெளியே சென்ற போது, அவரது குடும்பத்தினர் துாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவிலிருந்த, 40 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. வேலுார் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.