உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒலக்கூர் ஒன்றியத்தில் அதிகாரிகள் கலந்தாய்வு

ஒலக்கூர் ஒன்றியத்தில் அதிகாரிகள் கலந்தாய்வு

திண்டிவனம் : ஒலக்கூர் ஒன்றிய அலுவலகத்தில் அரசு வளர்ச்சிப் பணிகள் குறித்த அதிகாரிகள் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. மயிலம் எம்.எல்.ஏ., நாகராஜன் தலைமை தாங்கினார். ஆணையர்கள் ரவிச்சந்திரன், மைதிலி முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., ஆனந்ததாஸ், வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நாகராஜன் எம்.எல்.ஏ.,பேசியதாவது: முதல்வர் ஜெ.,வின் திட்டங்கள் அனைத்து கிராம மக்களுக்கும் முழுயாக சென்று சேரவேண்டும். எம்.எல்.ஏ., என்பதற்காக ஏதோ பெரிய ஆள் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை. நான் உங்களில் ஒருவன்தான், என்றும் எளிமையானவனாக மக்கள் நலனுக்காக பணியாற்றுவேன். அர சின் திட்டங்களை ஏழை, எளிய மக்களிடம் அதிகாரிகள் முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு நாகராஜன் எம்.எல்.ஏ., பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி