உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழிலாளி அடித்து கொலை மனைவி உட்பட 3 பேர் கைது

தொழிலாளி அடித்து கொலை மனைவி உட்பட 3 பேர் கைது

செஞ்சி: சொத்து தகராறில் தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவத்தில் மனைவி உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, அமைந்தகரை, டி.பி.சத்திரத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் லோகநாதன்,45; கூலி தொழிலாளி. இவரது மனைவி கல்பனா,32; திருமணமாகி 15 ஆண்டாகும் இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன் மனைவியுடன் செஞ்சி அடுத்த வௌாமை கிராமத்தில் உள்ள தனது மாமனார் ஆதிமூலம் வீட்டிற்கு வந்த லோகநாதன், சொத்து கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.கடந்த 6ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு சொத்து கேட்டு தகராறு செய்த லோகநாதனை, ஆதிமூலம் மற்றும் அவரது மணிகண்டன்,35; ஆகியோர் தாக்கினர். அதில் படுகாயமடைந்த லோகநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். கொலையை மறைத்த கல்பனா, லோகநாதன் உடலை அடக்கம் செய்ய டி.பி.சத்திரத்திற்கு கொண்டு சென்றார்.இதுகுறித்து தகவல் அறிந்த வி.ஏ.ஓ., தமிழ்வாணன், 21; அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, டி.பி. சத்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட லோகநாதன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆதிமூலம், மணிகண்டன் மற்றும் கொலையை மறைக்க முயன்ற கல்பனா ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை