உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின் விபத்துகளை தவிர்க்க ஆர்.சி.டி., கருவி பொருத்த அறிவுரை

மின் விபத்துகளை தவிர்க்க ஆர்.சி.டி., கருவி பொருத்த அறிவுரை

விழுப்புரம்: விழுப்புரம் மின் பகிர்மான வட்ட நுகர்வோர்கள் வீடுகளில் மின் விபத்துகளை தவிர்க்க ஆர்.சி.டி., கருவி பொருத்த வேண்டும் என மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:மின்நுகர்வோரின் அறியாமையால் மின் விபத்துகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தற்போது புதிய மின் இணைப்புகளில் ஆர்.சி.டி., என்ற புதிய கருவி பொருத்தி மின் இணைப்பு வழங்கப்படுகிறது.இந்த ஆர்.சி.டி., கருவி வீடுகள் மற்றும் மின் இணைப்பு வளாகத்தில் ஏதாவது மின்கசிவு ஏற்பட்டால் உடனே மின் துண்டிப்பு செய்து மின் விபத்து இருந்து பாதுகாக்கிறது. இதனால் உயிரிழப்பு தடுக்கப்படுகிறது.புதிய மின் இணைப்புகளில் இந்த கருவி பொருத்தாவிட்டால் கண்டிப்பாக மின் இணைப்பு வழங்கப்படாது. ஆர்.சி.டி., கருவி பொருத்தப்படாத பழைய மின் இணைப்புகளில் இதை கண்டிப்பாக பொருத்திக் கொள்ள வேண்டும்.வீடுகளில் உபயோகிக்கும் சிங்கில் பேஸ் மின்சாதன உபகரணங்களான கிரைண்டர், அயன்பாக்ஸ், மிக்சி, வாட்டர் பம்ப், குளிர்சாதன பெட்டி, வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட அனைத்தும் 3 பின்சாக்கெட் மூலமே பொருத்தப்பட வேண்டும். அனைத்து 3 பின் சாக்கெட்டுகளில் மூன்றாவது பின்னை அனைத்து மெயின் எர்த் டெர்மினரில் சேர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் மின் அதிர்வு மற்றும் மின் விபத்தை தவிர்க்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை