| ADDED : ஜூலை 30, 2024 11:40 PM
விழுப்புரம் : வளவனுாரில் லாரி டிரைவரை தாக்கிய சம்பவத்தில், 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் தமிழ்ச்செல்வன், 27; லாரி டிரைவர். வளவனுாரில் உள்ள தனியார் பேக்கிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, வளவனுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி லாரி ஓட்டிச் சென்றார்.வளவனுார் அருகே முன்னால் சென்ற ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிரே பைக்கில் வந்த வளவனுார் பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் பரத், 24; அவரது சகாதரர் விக்னேஷ், 24; உட்பட 4 பேர், லாரியை நிறுத்தி, ஏன் மோதுவதுபோல் வேகமாக வந்தீர்கள் என கேட்டு, தமிழ்ச்செல்வனை தாக்கினர்.இது குறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் பரத் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து, விக்னேஷை கைது செய்தனர்.