உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கலைக் கல்லுாரியில் இறுதிக் கட்ட கலந்தாய்வு

அரசு கலைக் கல்லுாரியில் இறுதிக் கட்ட கலந்தாய்வு

விழுப்புரம் : விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் 19ம் தேதி இறுதிக்கட்ட கலந்தாய்வு நடக்கிறது. விழுப்புரம் அரசு கல்லூரி முதல்வர் சிவக்குமார் செய்திக்குறிப்பு: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு, அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்குமான இறுதிக்கட்ட வராண்டா கலந்தாய்வு 19ம் தேதி, வியாழக்கிழமை காலை 10:00 மணிக்கு தொடங்கி நடக்கிறது.இந்த கலந்தாய்வில், அனைத்து பிரிவுகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.மாற்றுச் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை