| ADDED : ஜூன் 20, 2024 08:22 PM
விழுப்புரம் : விழுப்புரம் ஆதித்யாஸ் விவேகானந்தா பள்ளியில், வகுப்புகள் துவக்க விழா நடந்தது.பள்ளியின் நிறுவனர் ஆனந்தன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கிருஷ்ணராஜ் வரவேற்றார். பள்ளி தாளாளர் அசோக் ஆனந்தன், ஸ்ரீவித்ய நாராயணா அறக்கட்டளையின் அறங்காவலர் அனுதா பூனமல்லி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.முன்னதாக, பள்ளி துணை முதல்வர் அல்த்தியா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.பள்ளி குழந்தைகள் அனைவருக்கும், பள்ளி சார்பில் பரிசு வழங்கப்பட்டது.