உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மது பாட்டில் கடத்தியவர் கைது

மது பாட்டில் கடத்தியவர் கைது

மயிலம் : புதுச்சேரி மது பாட்டில் கடத்திய சென்னை நபரை போலீசார் கைது செய்தனர்.மயிலம் போலீசார், பெரும்பாக்கம் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது திண்டிவனம் நோக்கி சென்ற பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மது பாட்டில் கடத்தி செல்வது தெரியவந்தது. விசாரணையில் சென்னை, கொளத்துாரைச் சேர்ந்த செல்வா, 47; என்பவர், புதுச்சேரியில் இருந்து 291 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து செல்வாவை கைது செய்து, பைக் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ