உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டாரஸ் லாரி மோதி விபத்து; சூப் கடை உரிமையாளர் பலி

டாரஸ் லாரி மோதி விபத்து; சூப் கடை உரிமையாளர் பலி

மயிலம் : மயிலம் அருகே டாரஸ் லாரி மோதிய விபத்தில் சூப் கடை உரிமையாளர் இறந்தார்.மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு காதர் மகன் வசீர் அகமத், 34; கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் சூப், பக்கோடா வியாபாரம் செய்து வந்தார். இவர், நேற்று மதியம் 12:40 மணியளவில் பைக்கில் சென்றார். மயிலம் சாலையில் இருந்து திண்டிவனம் சர்வீஸ் சாலையில் திரும்பினார். அப்போது, ரெட்டணையில் இருந்து மயிலம் நோக்கிச் சென்ற டாரஸ் லாரி, பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வசீர் அகமத் சம்பவ இடத்திலேயே இறந்தார். மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை