உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஏ.டி.எம்., கார்டை மாற்றி ரூ.2 லட்சம் அபேஸ்

ஏ.டி.எம்., கார்டை மாற்றி ரூ.2 லட்சம் அபேஸ்

அவலுார்பேட்டை : வளத்தியில் ஏ.டி.எம்., கார்டை மாற்றிக் கொடுத்து 2 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வளத்தி அடுத்த இரும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, 62; விவசாயி. இவர், வளத்தியில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் கடந்த 10 ம்தேதி மதியம் பணம் எடுக்கச் சென்றார். அங்கு கார்டை மெஷினில் விட்டதில் பணம் வரவில்லை.அப்போது அங்கிருந்த 2 பேர் பணத்தை எடுத்துத் தருவதாகக் கூறி கார்டை வாங்கி முயற்சி செய்து விட்டு, பணம் வரவில்லை என அவரது கார்டை தராமல் வேறு கார்டை துரைசாமியிடம் கொடுத்துள்ளனர்.உடனே துரைசாமி வங்கி கிளையில் சென்று விசாரித்தபோது, அவருடைய கணக்கிலிருந்த 2 லட்சத்து 8 ஆயிரத்து 623 ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.ஏ.டி.எம்., மையத்தில் தன்னிடம் இருந்த கார்டை வாங்கி மாற்றிக் கொடுத்து அவர்கள் பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ