அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது
விழுப்புரம் : விழுப்புரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதிய பஸ் நிலையம் அருகே கொட்டப்பாக்கத்துவெளி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் ஆறுமுகம், 21; தனது பைக்கை அதிவேகமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஓட்டிச் சென்றார். இதேபோன்று, கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சின்னபாலு மகன் அஜீத்குமார், 28; என்பவர் நேற்று அதிகாலை 2:00 மணியளவில் புதிய பஸ் நிலையம் அருகே அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்றார். இருவர் மீதும் போலீசார், வழக்குப் பதிந்து கைது செய்து, பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.