உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதை மாத்திரையுடன் 2 வாலிபர்கள் கைது

போதை மாத்திரையுடன் 2 வாலிபர்கள் கைது

மயிலம்; மயிலத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மயிலம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் மலை அடிவார பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள், 1,250 கிராம் கஞ்சா மற்றும் 10 போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருந்து தெரியவந்தது.விசாரணையில், மயிலம் காமராஜர் நகர் கணேசன் மகன் செல்வம், 24; காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்கட்டளை தயாளமூர்த்தி மகன் மோகன்ராஜ், 24; என தெரியவந்தது. கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை