உள்ளூர் செய்திகள்

சூதாடிய 3 பேர் கைது

விழுப்புரம்: பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். செஞ்சி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சிறுகடம்பூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள செட்டிப்பாளையம் ஏரிக்கரை பகுதியில், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சிறுகடம்பூரை சேர்ந்த விஷ்ணு, 32; செஞ்சி என்.ஆர்.பேட்டையை சேர்ந்த கபிலன், 52; சிங்கவரத்தை சேர்ந்த குமரேசன், 41; ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, புள்ளி தாள்கள் மற்றும் ரூ.200 பணத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை