உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மது பாட்டில் விற்ற பெண் உட்பட 3 பேர் கைது

மது பாட்டில் விற்ற பெண் உட்பட 3 பேர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: மதுபாட்டில் விற்ற பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் ஒட்டனந்தல் கிராமப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜ், 42; என்பவரை கைது செய்தனர். இதேபோல் டி.புதுப்பாளையம் கிராமத்தில் மதுபாட்டில் விற்ற அப்பாவு, 73; மற்றும் சரவணம்பாக்கம் கிராமத்தில் மது பாட்டில் விற்ற சிவசங்கர் மனைவி சுபாஷினி, 26; என்பவரை கைது செய்தனர். 3 பேரிடமிருந்தும் 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை