உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 3 சவரன் திருட்டு போலீஸ் விசாரணை

3 சவரன் திருட்டு போலீஸ் விசாரணை

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம், வழுதரெட்டி, காந்தி நகரை சேர்ந்தவர் பூசமணி,64; ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவர் கடந்த 29ம் தேதி இரவு 11:00 மணிக்கு தனது வீட்டில் குடும்பத்தோடு துாங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, அவரது வீட்டின் அறையில் மேஜை மீது வைத்திருந்த கைப்பையில் இருந்த, 3 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த பையை மர்ம நபர்கள், அருகேவுள்ள ஜன்னல் வழியாக திருடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை