உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

கோட்டக்குப்பம், : கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதி மக்கள் சொத்து வரியை செலுத்தினால் கூடுதலாக 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என நகராட்சி கமிஷனர் புகேந்திரி தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கோட்டக்குப்பம் நகராட்சிக்கு 2024-25ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு செலுத்த வேண்டிய சொத்து வரியை வரும் 31ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி சொத்து வரியை செலுத்த வேண்டும்.மேலும், பொதுமக்கள் சிரமமின்றி சொத்து வரி செலுத்துவதற்காக வரும் 31ம் தேதி வரை சனிக்கிழமை உட்பட காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் கம்யூட்டர் வசூல் மையம் செயல்படும்.மேலும், https://tnurbanepay.tn.gov.inஎன்ற இணைய தள வழியாகவும் சொத்து வரியை செலுத்தலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை