உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டில் 20 கிலோ குட்கா பதுக்கியவர் மீது வழக்கு

வீட்டில் 20 கிலோ குட்கா பதுக்கியவர் மீது வழக்கு

விழுப்புரம், : விழுப்புரத்தில் 20 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரம் அருந்ததியர் தெருவில் உள்ள ராஜா, 40; என்பவரது வீட்டின் பின்புறத்தில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 20 கிலோ கொண்ட, குட்கா உள்ளிட்ட போதை பாக்கு பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து அவைகளை பறிமுதல் செய்து, ராஜா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை