தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் விண்ணப்பங்கள் வரவேற்பு
விழுப்புரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தீபாவளி பண்டிகைக்கு விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விருப்பமுள்ளோர் அரசு பொது இ-சேவை மையத்தில் உரிய ஆவணங்களோடு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அரசு உத்தரவின்படி, தற்காலிக பட்டாசு உரிமம் அரசு பொது இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக பெறப்படும் விண்ணப்பம் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். நேரடி விண்ணப்பம் ஏற்கப்படாது. தற்காலிக வெடிபொருள் உரிமம் வழங்கிய நாளிலிருந்து 30 நாட்கள் மட்டுமே செல்லத்தக்கது ஆகும். தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிப்போர், இந்த சான்றுகளை இ-சேவை மையத்தில் வழங்கி பதிவேற்றம் செய்ய வேண்டும். வரும் அக்., 20ம் தேதிக்குள் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதன் பிறகு பெறும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. இவ்வாறு தெரிவித் துள்ளார்.