சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ
விழுப்புரம்: விழுப்புரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த செம்மார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் குமார், 28; இவர், 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் கர்ப்பமான சிறுமிக்கு கடந்த 19ம் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியிடம் புகார் பெற்று, நேற்று முன்தினம் குமார் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.