வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த அமைப்பு இது போன்ற கூட்டங்களுக்கு பொருள் செலவு செய்ய மாட்டார்கள். எனவே கூட்டம் குறைவாகவே கூடும். மேலும் அடிக்கடி கூட்டம் போட மாட்டார்கள். எனவே மக்களுக்கு ஆர்வமும் இருக்காது.
ஆர்ப்பாட்டம் வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்.
விழுப்புரம்: சென்னையில் நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பிராமணர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென, தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் குமார் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பிராமணர்கள் மீதான அவதுாறு பிரசாரம் மற்றும் பொய் பிரசாரம் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.பிராமணர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நாளை 3ம் தேதி காலை 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பிராமணர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு இது போன்ற கூட்டங்களுக்கு பொருள் செலவு செய்ய மாட்டார்கள். எனவே கூட்டம் குறைவாகவே கூடும். மேலும் அடிக்கடி கூட்டம் போட மாட்டார்கள். எனவே மக்களுக்கு ஆர்வமும் இருக்காது.
ஆர்ப்பாட்டம் வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்.