உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊர்காவல் படைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஊர்காவல் படைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஊர்காவல் படைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆயுதப்படை அலுவலக செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட கடலோர ஊர்காவல் படை யில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 15 காலி பணியிடங்களை நிரப்ப, கோட்டக்குப்பம் உட்கோட்ட பகுதியில் உள்ள ஆண்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்றகப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம், 10ம் வகுப்பு, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 20 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், நல்ல உடல் தகுதி பெற்றவராகவும், பொது சேவையில் ஈடுபடுபவராகவும், தன்னார்வலராகவும், எவ்வித குற்றசெயல்களில் ஈடுபடாத நபர்களாக இருக்க வேண்டும். எந்த ஒரு சாதி, மத அரசியல் அமைப்புகளிலும் ஈடுபடாதவராக இருக்க வேண்டும். அரசு ஊழியராக இருந்தால், அத்துறை அதிகாரியிடமிருந்து தடையின்மை சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் 5 நாட்கள் பணிக்கு அழைக்கப்படுவர். பணி நாட்களுக்கு தலா ரூ.560 வீதம், மாதம் ரூ.2800 மதிப்பூதியம் வழங்கப்படும். விண்ணப்பங்கள் விழுப்புரம் ஊர்காவல் படை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் வரும், 25ம் தேதிக்குள், விழுப்புரம், ஆயுதப்படை அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை