தீப்பற்றி எரிந்த கார்
விழுப்புரம்; கார் மர்மமாக தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் அடுத்த சேந்தனுாரை சேர்ந்தவர் செல்வகணபதி, 27; கார் டிரைவர். இவர் தனது ரெனால்ட் டிரைபர் காரை, வடவாம்பலத்தில் உள்ள தனது நண்பர் மூர்த்தி என்பவரின் வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். நேற்று அதிகாலை 3:30 மணியளவில் காரும், அதன் அருகில் இருந்த வைக்கோல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இதில், கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.