உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

விழுப்புரம்; பெண்ணை திட்டி மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் அடுத்த கொளத்துாரைச் சேர்ந்தவர் தயாநிதி மனைவி பிருந்தாவதி, 44; இவரது மகன் பிரவீன். சாலாமேட்டை சேர்ந்தவர் பூவரசன், 30; கடந்த 24ம் தேதி பிரவீன், பூவரசன் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், கடந்த 26ம் தேதி பூவரசன் தம்பி வசந்தராஜா, 28; அவரது நண்பர் அஜீத், 22; ஆகியோர் பிரவீன் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த அவரது தாய் பிருந்தாவதியை திட்டி, மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், வசந்தராஜா, அஜீத் ஆகிய 2 பேர் மீதும் விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ