உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதியவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

விழுப்புரம்,; தகராறில் முதியவரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். விழுப்புரம் அடுத்த வி.புதுாரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 70; இவர் தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு சென்ட் புறம்போக்கு இடத்திற்கு பட்டா வாங்கியுள்ளார். அந்த இடத்தின் வழியாக அதே பகுதியை சேர்ந்த குமரன், ராஜேந்திரன், மலையாளம், ராஜாராம் ஆகியோர் செல்லக்கூடாது என சுந்தரமூர்த்தி கூறியுள்ளார். இதனால், ஏற்பட்ட தகராறில் குமரன் உள்ளிட்ட நான்குபேரும் சேர்ந்து சுந்தரமூர்த்தியை திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர். வளவனுார் போலீசார், குமரன் உள்ளிட்ட நான்குபேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !