உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இரு தரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு

இரு தரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே இரு தரப்பு மோதலில் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த பிடாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் அபிராஜ், 20; இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் தனது நண்பர்களோடு பாட்டு பாடி கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியே நடந்து சென்ற அப்பகுதியை சேர்ந்த கலைவாணன், 37; 'ஏன் சத்தமாக பாடுகிறாய்' என கேட்டு அபிராஜை திட்டி, தாக்கினார்.இதையடுத்து அபிராஜ் மற்றும் அவர் நண்பர்கள் ஜெயராஜ், 23; லோகேஷ், 25; நித்திஷ்குமார், 22; ஆகியோர் கலைவாணனை தாக்கினர்.இரு தரப்பு புகாரின் பேரில், கலைவாணன், அபிராஜ் உட்பட 5 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி