உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அண்ணியை தாக்கியவர் மீது வழக்கு 

அண்ணியை தாக்கியவர் மீது வழக்கு 

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே அண்ணியை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். வானுார் அடுத்த ஆப்பிரம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமாரவேல். இவரது மனைவி தனம், 46; குமரவேலின் சகோதரர் மதியழகன். இரு குடும்பத்தினரும், தனித்தனியாக அருகருகே வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வருகிறது.கடந்த 22ம் தேதி மதியழகன் தனது அண்ணன் குமரவேல் வீட்டிற்கு சென்றவர் அங்கிருந்த அண்ணி தனத்திடம் தகராறு செய்து தாக்கினார். இது குறித்து தனம் அளித்த புகாரின் பேரில், மதியழகன் மீது கோட்டக்குப்பம் போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை