இலவச தையல் இயந்திரம் வழங்குவதற்கான தேர்வு
விழுப்புரம்: விழுப்புரம் மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்குவதற்கான தேர்வு நடந்தது.விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடந்த தேர்வில் 237 பேர் பங்கேற்றனர். அவர்களில் 232 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி, தையல் ஆசிரியர் மோகனா, செயல் திறன் உதவியாளர் முருகன், பேச்சு பயிற்சியாளர் அபிஷேகா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.