உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் கலந்தாய்வு

அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் கலந்தாய்வு

விழுப்புரம், : விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் நாளை கணிதவியல், புள்ளியியல், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கான பொது கலந்தாய்வு நடக்க உள்ளதாக முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.அவர் விடுத்த செய்திக்குறிப்பு :கல்லுாரியில் இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு தொடர்ச்சியாக, கணிதவியல், புள்ளியியல், ஆங்கிலம் பாடப்பிரிவுகள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவில் விண்ணப்பித்தோருக்கு நாளை கலந்தாய்வு நடக்கிறது.இது பற்றி கல்லுாரி இணையதளம் http://www.aagacvpm.edu.in/ எனும் முகவரியில் காணலாம். மாணவர்கள் கலந்தாய்வு தினத்தில் காலை 9:00 மணிக்கு சேர்க்கை அரங்கில் இருக்க வேண்டும். தாமதமாக வருவோர், அதே நேரத்தில் சென்று கொண்டிருக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கைக்காக அனுமதிக்கப்படுவர். தேவையான ஆவணங்களுடன், சேர்க்கை கட்டணத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி