உள்ளூர் செய்திகள்

கிரைம் செய்திகள்...

இருதரப்பு மோதல்: ஒருவர் கைது

விழுப்புரம் அடுத்த மல்லிகைப்பட்டைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன்கள் அசோக்குமார், 26; அஜித்குமார், 24; இருவரும் வீடு கட்டுவதற்கு தந்தை அண்ணாமலையிடம் பணம் கேட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில், அண்ணாமலை, 47; மற்றும் அவரது தம்பி கந்தன், 45; ஆகியோர், அசோக்குமார், அஜித்குமாரை தாக்கி மிரட்டினர். இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், 4 பேர் மீதும் காணை போலீசார் வழக்குப் பதிந்து அண்ணாமலையை கைது செய்தனர்.

முதியவரை தாக்கியவர் மீது வழக்கு

விழுப்புரம் அடுத்த சென்னாகுணத்தைச் சேர்ந்தவர் நடராஜன், 60; இவரது உறவினர் வெங்கடேசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குணசேகர், 60; என்பவருக்கும், வீட்டு மனையில் 3 அடி நிலம் தொடர்பாக பிரச்னை உள்ளது. இந்நிலையில், வெங்கடேசனுக்கு ஆதரவாக பேசிய, நடராஜனை, கடந்த 13ம் தேதி குணசேகர் தாக்கி, மிரட்டல் விடுத்தார். விழுப்புரம் மேற்கு போலீசார், குணசேகர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

குடும்பத் தகராறு: கணவர் தற்கொலை

விழுப்புரம் சுதாகர் நகரைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் இளங்கோ, 33; பெட்டிக்கடை உரிமையாளர். இவரது மனைவி நர்மதா, 28; இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த இளங்கோ வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தம்பி மாயம்: அண்ணன் புகார்

செஞ்சி, கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு, 47; தனியார் பள்ளி ஆசிரியர். இவர், கடந்த 16ம் தேதி காலை பள்ளிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை அவரது அண்ணன் சகாயராஜ் அளித்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இருவர் மீது வழக்கு;

வளவனுார் அடுத்த எல்.ஆர்.பாளையம் ரகு மகன் சுகன், 24; இவர், கடந்த 15ம் தேதி, கெங்கராம்பாளையம் சென்று வீடு திரும்பினார். வழியில் நின்றிருந்த தனது தோழி கெங்கராம்பாளையம் சிரஞ்சீவி மனைவி பிரபாவதி, 19; என்பவரிடம் பேசினார். இதனை பார்த்து கோபமடை ந்த சிரஞ்சீவி, எனது மனைவியிடம் ஏன் பேசுகிறாய் என கேட்டு, சுகனிடம் தகராறு செய்தார். இதில் இருவரும் தாக்கிக் கொண்டனர். வளவனுார் போலீசார், சிரஞ்சீவி, சுகன் மீது வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

ஒருவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

விழுப்புரம் அடுத்த மரகதபுரம் தேவா, 30; சதீஷ், 35; விவசாயிகள். இருவரும் கண்டியமடை ஏரியை குத்தகை எடுத்து, மீன் வளர்த்து வருகின்றனர். மரகதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 52; இவர்களுக்குள் முன் விரோதம் இருந்தது. கடந்த 15ம் தேதி குமாரை வழிமறித்து, தேவா, சதீஷ் ஆகியோர் திட்டி தாக்கினார். புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் தேவா, சதீஷ் மீது வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !