உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : நுாறு நாள் வேலை உறுதித்திட்ட நிதி 4,034 கோடி ரூபாயை தமிழகத்திற்கு தராத மோடி அரசை கண்டித்து கோலியனுாரில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதாகவும், இதை எதிர்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டன குரல் கொடுத்து வருவதாகவும் பேசினார்.பொருளாளர் ஜனகராஜ், கோலியனுார் ஒன்றிய செயலாளர் (கிழக்கு) தெய்வசிகாமணி, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், அவைத் தலைவர் வழக்கறிஞர் கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன், நகர இளைஞரணி மணிகண்டன், ஒன்றிய பொருளாளர் சவுந்தர ராஜன்.துணைச் செயலாளர்கள் ஸ்ரீதர், ஜெயபால், ஜெயந்தி, ராஜகணேஷ், மாவட்ட பிரதிநிதி மணி, ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அய்யப்பன், ஊராட்சி தலைவர் மணிவேல்.நிர்வாகிகள் நீலகண்டன், அய்யனார், சிவகுரு, மனோகர், ராவணன், பிரபா, பாலகிருஷ்ணன், மகாதேவன், பெருமாள் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.தொடர்ந்து, கோலியனுார் தெற்கு, மேற்கு, காணை, கண்டமங்கலம், வானுார், கிளியனுார், கண்டமங்கலம் உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

செஞ்சி

நாட்டார்மங்கலம் மற்றும் திருவம்பட்டிலும் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை தலைமை தாங்கினர். மத்திய ஒன்றிய செயலாளர் இளம்வழுதி, அவைத்தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றனர். ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தார். தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் சிவா, மாவட்ட அவைத் தலைவர் சேகர் கண்டன உரையாற்றினர்.நிர்வாகிகள் தமிழரசன், கிருஷ்ணமூர்த்தி, அண்ணாமலை, கண்ணன், பாண்டியராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். திருவெண்ணெய்நல்லுார்ஏமப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் ஓம் சிவசக்திவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் தேவி செந்தில், துணைத் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றனர்.மாவட்ட பிரதிநிதி மோகன்ராஜ், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் வெங்கடேசன், தலைமைக் கழக பேச்சாளர் பரசுராமன், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், தி.மு.க., நிர்வாகிகள் சிவா உட்பட பலர் பங்கேற்றனர்.இதேபோல் பாவந்துார் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமையிலும், அரசூர் கூட்டுறவு பகுதியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி