உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மயிலம் முருகன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு வழிபாடு

 மயிலம் முருகன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு வழிபாடு

மயிலம் : மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம், தயிர் உள்ளிட்ட பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. 11:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. பிற்பகல் 12:00 மூலவர் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ