உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றம்

மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றம்

மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது.அதனையொட்டி, இன்று 2ம் தேதி அதிகாலை சுவாமிக்கும், கொடி மரத்துக்கும் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடக்கிறது. பின், 5:46 கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து, 11:00 மணிக்கு வெள்ளி விமானத்தில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி கிரிவலம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு வெள்ளி நாக வாகனத்தில் உற்சவர் அருள்பாலிக்கிறார். வரும் 6ம் தேதி இரவு 8:00 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருள்கிறார். 9ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும் வெள்ளி குதிரை வாகனத்தில் மலை வலக்காட்சியும் நடக்கிறது. வரும் 10ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. 11ம் தேதி காலை 9:00 மணிக்கு தீர்த்த வாரி உற்சவமும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. 12ம் தேதி முத்து பல்லக்கு உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ