உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மயிலம் தொகுதியில் போட்டியிட மாஜி அமைச்சர் விருப்ப மனு

 மயிலம் தொகுதியில் போட்டியிட மாஜி அமைச்சர் விருப்ப மனு

விழுப்புரம்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட கட்சியில் விருப்ப மனு அளிக்கப்பட்டது. விழுப்புரம் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகம் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இவர், மயிலம் தொகுதியில் போட்டியிடுவதற்கு, அவரது சகோதரர் நியூஸ் ஜெ., நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் சண்முகம் மகன் ஜெயசிம்மன் ஆகியோர் சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று விருப்ப மனு அளித்தனர். முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விருப்ப மனுவை பெற்றுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ