வெங்கட்ரமணர் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்தம்
செஞ்சி : செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி நிறைவு விழா நடந்தது. செஞ்சிக்கோட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணனர் கோவிலில் கடந்த 2ம் தேதி முதல், 9 நாள் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி நடந்து வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்தனர். காலை 9:00 மணி முதல் 2:30 மணி வரை பாகவதர் மற்றும் ஆண்டாள் கோஷ்டியினர் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரம் படித்தனர். பின்னர் மகா தீபாரதனையும், அன்னதானமும் நடந்தது. 9 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினரை கவுரவித்து வஸ்திரம் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கபூபதி கல்லுாரி சேர்மன் ரங்கபூபதி தலைமை தாங்கினார். மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, ஒருங்கிணைப்பாளர் வைகை தமிழ்செல்வன் முன்னிலை வகித்தனர். சுதர்சனம் பாகவதர், ஜெயந்தி தமிழ்செல்வன் மற்றும் விழா குழுவினர் பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.