உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பஸ் மோதி முதியவர் பலி

அரசு பஸ் மோதி முதியவர் பலி

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த ஆலாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி ,84; இவர், கடந்த 13 ம் தேதி சைக்கிளில், தனது கிராமத்திலிருந்து, விழுப்புரம் -திருச்சி நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மண்ணாங்கட்டி இறந்தார். விபத்து குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ