மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்தியடிப்பர் லாரி பறிமுதல்
02-Mar-2025
விழுப்புரம் : காணை அருகே அனுமதியின்றி கிராவல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.காணை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சரவணன் தலைமையில் அலுவலர்கள் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போத அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். லாரியை நிறுத்திய டிரைவர் தப்பியோடினார்.லாரியை சோதனை செய்ததில், 3 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து, காணை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Mar-2025