உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை

மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை

விழுப்புரம்:காணை அருகே மனைவி திட்டியதால் மனமுடைந்தை கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். காணை அடுத்த மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன்,50; குடிப்பழக்கம் உடையவர். தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றதால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 12ம் தேதி, மதுபோதையில் வீட்டுக்கு வந்த அய்யப்பனை , மனைவி லட்சுமி கண்டித்தார். இதனால் மனமுடைந்த அய்யப்பன் விஷம் குடித்து மயங்கினார். அவரது குடும்பத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நேற்று முன்தினம் இறந்தார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை