உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செவிலியர் வீட்டில் நகை திருட்டு

செவிலியர் வீட்டில் நகை திருட்டு

விழுப்புரம்: விழுப்புரத்தில் செவிலியர் வீட்டில் 6 சவரன் நகை திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம், விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந்தவர் சபாபதி மனைவி சிவகாமசுந்தரி, 57; முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் 6 சவரன் செயினை படுக்கை அறையில் கழற்றி வைத்துவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது நகையை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை