மேலும் செய்திகள்
மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
09-Jun-2025
செஞ்சி : குடிப்பதற்கு பணம் இல்லாததால் கூலி தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அனந்தபுரம் அடுத்த உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் மகன் ராஜா, 38; கூலி தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இரண்டு மாதம் முன்பு விபத்தில் காயம் அடைந்ததால் வீட்டில் இருந்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், குடிக்க பணம் இல்லாததால் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவரது தங்கை ரமணி கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
09-Jun-2025