பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்
செஞ்சி: ஆதி பிரம்மனுக்கு நடந்த அமாவாசை தாலாட்டு உற்சவத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர். மேல்மலையனுார் லட்சுமி நாராயண அஷ்டலட்சுமி மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் ஆதி பிரம்மனுக்கு ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. அதை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் ஆதி பிரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு ஆதிபிரம்மனுக்கு மகா தீபாரதனையும், ஊஞ்சல் தாலாட்டு உற்சவமும் நடந்தது.