உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 15 சவரன் நகையை கடனாக வாங்கி ஏமாற்றியவர் கைது

15 சவரன் நகையை கடனாக வாங்கி ஏமாற்றியவர் கைது

விழுப்புரம்: நண்பரிடம், 15 சவரன் தங்க நகையை கடனாக வாங்கி ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம், ஓம்சக்தி நகர் சென்னை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சதீஷ்குமார், 35; மர வியாபாரம் செய்து வருகிறார். இவர், தனது தொழில் முதலீட்டுக்காக, கல்லுாரி நண்பரான, விழுப்புரம் அடுத்துள்ள புருஷானுாரை சேர்ந்த சுதாகர் மனைவி திவ்யா,34; என்பவரிடம், கடந்த 2023ம் ஆண்டு கடனாக பணம் கேட்டுள்ளார். தொழிலில் வரும் லாபத்தில் பங்கு தருவதாக அவர் கூறியதை நம்பி, திவ்யா தான் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 15 சவரன் நகைகளை, சதீஷ்குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால், நகையை வாங்கிச்சென்ற அவர், லாபத்தில் பங்கும் தராமல், நகையையும் திருப்பித்தராமல் ஏமாற்றி வந்துள்ளார். சமீபத்தில் நேரில் சென்று கேட்டபோது, திவ்யாவை திட்டி, அவர் மிரட்டி அனுப்பியுள்ளார். இது குறித்து, திவ்யா அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, சதீஷ்குமாரை நேற்றுகைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ