மேலும் செய்திகள்
லாரியில் மணல் கடத்தல் கரூர் டிரைவருக்கு 'காப்பு'
12-Aug-2025
விழுப்புரம் : மினி லாரியில் மணல் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார், நேற்று மதியம் சிறுவந்தாடு சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, மோட்சகுளம் சுடுகாடு அருகே மினி லாரியில் ஆற்று மணல் கடத்தி வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் விழுப்புரம் காந்தி நகரை சேர்ந்த சங்கர் மகன் மணிகண்டன், 20; மற்றும் ஏ.கே.குச்சிப்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ், 25; என்பதும், ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்ததும் தெரிந்தது. இருவர் மீதும் வழக்கு பதிந்து, டிரைவர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மினி லாரியை பறிமுதல் செய்து விசாரிக் கின்றனர்.
12-Aug-2025