உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மினி லாரியில் மணல் கடத்தியவர் கைது

 மினி லாரியில் மணல் கடத்தியவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மினி லாரியில் ஆற்று மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் திருப்பாச்சனுார் எல்லீஸ்சத்திரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மினி லோடு கேரியரில் ஆற்று மணல் கடத்தி வந்த விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கத்தை சேர்ந்த சக்திவேல் மகன் ஸ்டீபன்ராஜ், 19; என்பவரை பிடித்தனர். இதனையடுத்து, தாலுகா போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர். மணலுடன் கூடிய மினி லோடுகேரியர் வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ