உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அடகு கடையில் திருட முயன்ற மர்ம நபருக்கு வலை

அடகு கடையில் திருட முயன்ற மர்ம நபருக்கு வலை

திருவெண்ணெய்நல்லுார்: அடகு கடை பூட்டை உடைத்து திருட முயற்சித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் தர்மராம் மகன் மாதுரம்,42; இவர், திருவெண்ணெய்நல்லுார் கடைவீதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.நேற்று காலை 8:30 மணிக்கு கடையை திறக்க வந்தோபது, முன்பக்க ஷட்டரின் பூட்டுகள் உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி