மூதாட்டி மாயம் போலீஸ் விசாரணை
விழுப்புரம்: மூதாட்டி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வளவனுார் அடுத்த அற்பிசம்பாளையத்தைச் சேர்ந்த வீரப்பன் மனைவி லலிதா, 60.இவர், கடந்த 4ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.