உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் ஆந்தை மீட்பு

அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் ஆந்தை மீட்பு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் அறிய வகை ஆந்தை மீட்கப்பட்டது.விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தமிடத்தில் நேற்று மாலை 5:00 மணிக்கு அறியவகை ஆந்தை மரத்தில் இருந்து பறக்க முடியாமல் கீழே விழுந்தது. தகவல் அறிந்து வந்த வனச்சரகர்கள், ஆந்தையை பிடித்து காப்புக் காட்டில் விட கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி