பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா
திண்டிவனம் : திண்டிவனம் செஞ்சி ரோட்டிலுள்ள பாலமுருகன் கோவிலின் 48 வது பங்குனி உத்திர விழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை முருகனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு ராஜேந்திரன் என்பவருக்கு, பக்தர்கள் சார்பில் மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது. அதைத் தொடர்ந்து மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தாலும், மாலை 4:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது.திராளான பக்தர்கள் தீ மிதித்தனர். மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக அலகு குத்தி, வாகனங்களின் முருகன் சுவாமியுடன் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.