மேலும் செய்திகள்
காஷ்மீர் தாக்குதலில்உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
26-Apr-2025
செஞ்சி : ஜம்போதி கிராமத்தில் காங்., சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது.செஞ்சி அடுத்த ஜம்போதி கிராமத்தில் செஞ்சி வட்டார காங்., சார்பில் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடந்தது. செஞ்சி வட்டார காங்., தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். வட்டார விவசாய அணி தலைவர் அன்புச்செழியன் முன்னிலை வகித்தார். விவசாய அணி மாவட்ட தலைவர் ஜோலதாஸ், சிறுபான்மையினர் மாவட்ட தலைவர் சையத் மாலித், அனந்தபுரம் நகர தலைவர் முகமது இந்திரிஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கிராம கமிட்டி தலைவர் பரமசிவம் நன்றி கூறினார்.
26-Apr-2025