உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் மோதி நடந்து சென்றவர் பலி

கார் மோதி நடந்து சென்றவர் பலி

செஞ்சி: செஞ்சி அருகே கார் மோதி நடந்து சென்றவர் இறந்தார்.செஞ்சி அடுத்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் அமிர்தம் மகன் ஸ்டாலின் என்கிற கிளாரன்ஸ் 49. இவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் சத்தியமங்கலத்தில் இருந்து பாலப்பாடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஸ்டாலின் சம்பவ இடத்திலேயே இருந்தார்.புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ